Benefits of Beetroot(பீட்ரூட்)

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏன் தெரியுமா?

எங்களுக்கு தெரியும். உங்களுக்கு பீஸா, பர்கர், வறுத்த சிப்ஸ் பிடிப்பது போல, பீட்ரூட்டை பிடிக்காதென்று. நல்லதை யாருக்குதான் முதலில் பிடிக்கும். உண்மையான நண்பர் யார் என தெரிந்து கொண்ட பின்தான் அவரை கொண்டாடுவோம். 

அப்படிதான் பீட்ரூட்டும். அதனை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காது. அதன் நிறமோ, அல்லது அதன் ருசியோ எதுவென்று தெரியாது, ஆனால் பீட்ரூட்டை பார்த்தாலே ஓடி விடுவார்கள். ஆனால் பீட்ரூட் உடலுக்கு செய்யும் நன்மைகளை தெரிந்தால், அதனை நிச்சயம் ஒதுக்க மாட்டீர்கள். 

பீட்ரூட்டில் தேவையான விட்டமின் மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. ஆனால் அது உடல் மற்றும் மனம் சம்பந்தமான பாதிப்புகளுக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என பார்க்கலாமா?

மன அழுத்தத்தை குறைக்கும்


இந்த காலகட்டங்களில் மன அழுத்தம் என்பது சாதரணமாகிவிட்டது. பொருளாதாரம் அந்தஸ்து என எல்லாவற்றிற்கும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றியை நோக்கி எல்லாரும் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவு மன அழுத்தம். 
மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது. ஆனால் நீங்கள் மருத்துவரை அணுகி அவர் தரும் தரும் மருந்துகளை உட்கொள்ளும்போது, அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். உடல் பருமன், இன்னும் பல பிரச்சனைகளை தரும்.

அதை விட எளிமையான வழி, பீட்ரூட் சாப்பிடுவதுதானே. அதிலுள்ள பீடெயின் என்ற பொருள் மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்து, புத்துணர்வு தருகிறது. எனவே பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், எல்லாமே டே இட் ஈஸி பாலிஸிதான்.

பீட்ரூட் இன்னொரு வயாகரா 


அந்த காலகட்டத்தில் ரோம நகரங்களில் பாலுணர்வை தூண்ட பீட்ரூட் தான் உணவில் எடுத்துக் கொள்வார்களாம். இது வயாகராவை விட பலனை தருகிறது. பக்க விளைவுகள் இல்லை. இதனை இயற்கை வயாகரா என மருத்துவர்கள் அழைக்கிறார்கள். பீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டுகிறது.


அனிமியாவை போக்குகிறது


ரத்த சோகைக்கும் அற்புத பலனை பீட்ரூட் தருகிறது. இவை உடலில் ரத்த செல்களை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. பீட்ரூட் இரும்பு சத்தை அதிகம் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரும்புசத்தினை உடலில் உறிஞ்சு கொள்ளவும் உதவி புரிகிறது.

தூக்கமின்மை


பீட்ரூட்டில் பீடெய்ன் மற்றும் ட்ரிப்டோஃபேன் ஆகியவை நரம்புகளை தளர்த்தி, தூக்கம் வரச் செய்கிறது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.

ஃபோலேட் என்ற பொருளும் பீட்ரூட்டில் உள்ளது. அது நல்ல மன நிலையை உண்டாக்குகிறதாம். மன அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் பீட்ரூட் எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.

ரத்தக் கொதிப்பு மற்றும் இதய கோளாறு


ரத்தக் கொதிப்பினை பீட்ரூட் குறைக்கிறது. இதய அடைப்பு, கோளாறுகளை வர விடாமல் தடுப்பதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது.இனிமேலாவது பீட்ரூட்டை வெறுக்காதீர்கள். அது நல்லதை தவிர வேறொன்றும் நமக்கு செய்வதில்லை.


இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்




கைகள் நிறம் மங்கி, பொலிவின்றி இருக்கிறதா?


சிலருக்கு முகம் ஒரு நிறத்தில், கை ஒரு நிறத்தில் இருக்கும். முகம் நிறமாக இருந்தாலும் கைகள் கருமையடைந்து டல்லாக இருக்கும்.
ஏனெனில் முகத்தை விட கைகள் எளிதில் சூரியக் கதிர்களால் பாதிக்கும். காரணம் அங்கே கொழுப்புகள் மிக குறைவு. அதனால் தோல் மிருதுவாக இருக்கும். எளிதில் சூரியக் கதிர்கள் ஊடுருவும். ஆகவே எளிதில் கருமை ஆகிவிடும்.
இதனை தவறாமல் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வார இறுதியில் பராமரிப்பினை மேற்கொண்டால், உங்களுக்கு அழகிய கைகள் கிடைக்கும். கைகளும் அழகாய் இருந்தால்தானே அழகான தோற்றமும் முழுமையாக இருக்கும். உங்களுக்கான சில குறிப்புகள். படித்து, செய்து, பலனைப் பெறுங்கள் தோழிகளே

இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

எலுமிச்சை சாறு மற்றும் உப்பு

ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொண்டு அதில் கல் உப்பு சிறிதினை சேர்த்து கரையும் வரை கலக்குங்கள்.
பின் அதனை கைகளில் தடவி, நன்றாக நீவி விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம். இரண்டுமே இயற்கையான ப்ளீச் ஆகும். அழுக்குகளை சுத்தமாக களைந்து, சருமத்தின் நிறத்தினை மாற்றும். சருமம் மிருதுவாகும்.

கடலை மாவு பேக்!

தேவையானவை :
கடலை மாவு : 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் : ஒரு சிட்டிகை
பால் : அரை கப்
இந்த மூன்றையும் கலந்து கைகளைல் தேய்க்கவும். நன்றாக காய்ந்தபின் கழுவுங்கள். வாரத்தில் மூன்று நாட்கள் செய்தால், கருமை மாறி கைகள் அழகாகிவிடும். காரணம், கடலை மாவு, இயற்கையான ஸ்க்ரப்பகவும், ப்ளீச்சாகவும் செயல்படுகிறது. மஞ்சள் கிருமி நாசினி. மேலும் பால் ஈரப்பததை சருமத்திற்கு அளிக்கிறது.

பப்பாளி மற்றும் தேன் பேக்

தேவையானவை :
பப்பாளி -3 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் தேன் சேர்க்கவும். இப்போது கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து கழுவலாம். தேன் சிறந்த மாய்ஸ்ரைசர். பப்பாளி நிறம் அளிக்கிறது. இறந்த செல்களை அகற்றி, கருமையைம் போக்கச் செய்யும்.

ஆரஞ்சு தோல் பேக்

கைகளில் சருமத்தின் நிறமே மங்கிப் போய், பொலிவின்றி காணப்பட்டால், ஆரஞ்சு தோல் மிகச் சிறந்த தீர்வு தருகிறது. ஆரஞ்சு தோலை காயவைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
தேவையான பொடி எடுத்துக் கொண்டு, அதில் பாலினை கலந்து கைகளில் தடவுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவிவிடவும். சருமம் நிறம் கூடி தேஜஸ் வருவதை பார்ப்பீர்கள்.

பாதாம்

பாதாமை இரவில் ஊற வைத்து மறு நாள் அதன் தோலை உரித்து, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பாதாம் பேஸ்ட்டில் சிறிது சந்தன எண்ணெய் கலந்து கைகளில் தடவுங்கள். இது கருமையை அகற்றி, ஒல்லியான கைகளுக்கு சற்று புஷ்டியை தரும்.

உருளைக் கிழகு சாறு

உருளைக் கிழங்கு சாறு சூரிய கதிர்களால் பாதிக்கப்பட்ட கருமையை போக்குவதற்கு அருமையான வழியாகும். உருளைக் கிழங்கின் தோலை அகற்றி,அரைத்து, அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதனை கைகளில் பூசி, காய்ந்ததும் கழுவிவிடுங்கள். நாளடைவில் கருமை இருந்த இடமே தெரியாமல், சருமம் ஒரே நிறத்தைப் பெறும்.
முடிந்த வரை வெளியில் செல்லும் போது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுச் செல்லுங்கள். 
இரவில் தினமும் தயிரை பூசி, காய்ந்ததும் கழுவினாலும் கருமை அகன்று பூப்போன்ற கைகள் உங்களுக்கு கிடைக்கும்.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

Benefits of Papaya Seed(பப்பாளி விதைகளைச் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?)

பப்பாளிப் பழம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் பெங்களூர் பப்பாளியை சாப்பிட்ட பின் இதனைப் பிடிக்காது என்று சொல்ல மாட்டீர்கள். அவ்வளவு இனிப்பான சுவை இருக்கும்.

பப்பாளியில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பப்பாளி மரம் எளிதில் எங்கும் வளரக் கூடியது. பூச்சி மருந்தோ, உரமோ தேவைப்படாது. ஆகவே மற்ற பழங்களைப் போலல்லாமல் அவற்றை தைரியமாக உண்ணலாம்.
பப்பாளியை சாப்ப்பிட்டால் நல்லது எனத் தெரியும். ஆனால் பப்பாளி விதையையும் உண்ணலாம் எனத் தெரியுமா? பப்பாளி விதைகள் பப்பாளியைவிட நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றன.
சிறிது கசப்பு சுவையுடன்தான் இருக்கும்.ஆரோக்கியத்தை விரும்புவர்கள் அப்படியே பழத்தோடு சாப்பிடலாம். சுவையையும் கூட விரும்புவர்கள் விதைகளை மசித்து சாலட்டுடனோ, வேறு உணவுகளுடனோ, அல்லது ஜூஸுடனோ கலந்து சாப்பிடலாம்.
இது நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், குழந்தைகளுக்கு எளிதில் அவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் போகலாம். ஆகவே மருத்துவரை ஆலோசித்துவிட்டு குழந்தைகளுக்கு தரலாம்.

பப்பாளிவிதைகளின் நன்மைகள் :

பப்பாளி விதைகள் பெப்பைன் என்ற என்சைமைக் கொண்டுள்ளது.அது முழுக்க ஜீரணத்திற்கு உதவுகிறது. ஆகவே கல்லையும் ஜீரணிக்கக் கூடிய ஆற்றல் இந்த விதைகளுக்கு உண்டு.

வயிற்றுப் பூச்சியை அழிக்கும்:

தினமும் அல்லது வாரம் மூன்று முறையாவது பப்பாளி விதைகளை சாப்பிட்டால்,வயிற்றில் பூச்சிக்கள் மற்றும் புழுக்கள் ஏற்படாது. பப்பாளி விதைகளில் உள்ள சத்துக்கள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்கிறது.

இயற்கை கருத்தடை:

குழந்தைப் பேறினை தள்ளிபோட வேண்டும் என நினைப்பவர்கள், மாத்திரை மருந்துகளுக்கு போகாமல் இந்த பப்பாளி விதைகளை உண்ணலாம். இவை இயற்கையாகவே கருத்தரிக்க விடாமல் செயல்படும்.

கேன்ஸர் செல்களை தடுக்கும்:

இவைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, உடலில் கொடிய மாற்றங்களை உண்டாக்கும் கேன்ஸர் செல்கள் உருவாகாது என ஆய்வு கூறுகின்றது.

வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்:

பல வகையான ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி, ஆகியவற்றால் உண்டாகும் வீக்கத்தை குறைத்து, வலியைப் போக்கும் இந்த பப்பாளி விதைகள்.

கிருமிகளை தூர விரட்டும்:

நோயை உருவாக்கக்கூடிய, ஸ்டைஃபைலோ கோக்கஸ், ஈ கோலை, மற்றும் சால்மோனெல்லா ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, அவைகளை உடலினுள் வர விடாமலும் தடுக்கின்றன. இவற்றால், உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் காய்ச்சல்களை நம்மை அண்ட விடாது.

கல்லீரலை பாதுகாக்கும் :

பப்பாளி கல்லீரலுக்கு தேவையான ஆரோக்கியமான போஷாக்கைத் தரும். லிவர் சிரோசிஸ் போன்ற கல்லீரல் நோய்களை குணப்படுத்தும். பப்பாளி விதைகளை பேஸ்ட் செய்துஅதனை எலுமிச்சை சாற்றில் கலந்து குடிக்கலாம்.

சிறு நீரக செயல்பாடு :



சிறு நீரக செயல்பாட்டினையும் நன்றாக தூண்டும். இதனால் உடலில் தீங்கைத் தரும் நச்சுக்களும் கழிவுகளும் எளிதில் வெளியேறுகின்றன.
ஆகவே உடலுக்கு இவ்வளவு நன்மை தரக் கூடிய இந்த பப்பாளி விதையை வாரம் ஒரு முறையாவது உங்கள் உணவினில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த நோயையும் உங்களை தைரியமாக அண்டாது. அவற்றை ஓட ஓட விரட்டலாம்.வளமோடு வாழலாம்.
Tips to eat Papaya seed WikiHow
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

உடல் பருமனா? கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த ஜூஸ் குடிங்க!

இந்த இன்ஸ்டென்ட் காலத்துல எல்லாமே ஈஸியாய் கிடைக்குது. சாலையில் நடந்து செல்லும்போது விதவிதமான கலர்கலரான உணவுவகைகள் மற்றும் அதன் வாசனைகள் நம்மை ஈர்க்கும். நாக்கு ஊறச் செய்து சாப்பிடத் தூண்டும். உடனே சென்று ஒரு பிடிபிடித்துவிட்டுதான் வருவோம்.பின் அதற்கு அடிமையாகி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிட்டு உடல் எடையை அதிகப்படுத்தி விடுவோம்.

இதுதான் குழந்தைகளிருந்து பெரியவர்கள் வரை நடக்கிறது. உடல் எடை அதிகமானால் டயாபடிஸ், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.
பிறகு எப்போதுதான் வாழ்க்கையை அனுபவிப்பது என்கிறீர்களா? அளவுக்கு மீறினால் எதுவும் உடலுக்கு கேடு என்பதை சாப்பிடும்போதெல்லாம் நினைவில், வைத்துக் கொள்ளுங்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய எனர்ஜி தருகிறது. ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது .கூடவே ரத்தக்கொதிப்பு,சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.
வாழ்க்கை அனுபவிக்க என்று சொல்லி, கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு , அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள். வருமுன் காப்பது நல்லது.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த எளிய ட்ரிங்க் குடித்தால் கொலஸ்ட்ரால் குறையும் .


தேவையானவை :

வாழைப்பழம் -1
ஆரஞ்சு -1
பட்டைபொடி-அரைஸ்பூன்
சோயா மில்க்-அரைக் கப்

பலன்கள்: 
வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக் கொதிப்பை அண்ட விடாது. ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.
ஆரஞ்சில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது. உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

செய்முறை:

வாழைப்பழம் ஆரஞ்சு, ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து பருகவும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது. மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்.

இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

இந்த அல்டிமேட் காலத்தில் எதுவும் சாத்தியமாகிற சூழ் நிலையைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வாழ்க்கை முறையையும், பொருளாதார நிலையையும் இன்னும் சிறந்த வழியில் எடுத்துக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால் நம் உடலில் சில சின்ன சின்ன விஷயங்களை கவனிக்கத் தவற விடுகிறோம்.



உதாரணம் உடலுக்கு தேவையான நீர் குடிக்கிறோமா என ஒருநாளும் நாம் நினைப்பதில்லை. போதிய நீர் குடிக்காமல் இருந்து உடலில் பிரச்சனைகளை கொண்டு வருகிறோம். அதே வேளையில் நம் சருமமும் ஈரப்பதத்தை இழந்து பொலிவில்லாமல் காணப்படும்.
தண்ணீர் குடிக்காதது மட்டும் காரணம் இல்லை. மாசுபட்ட சுற்றுப்புற சூழல், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது, டென்ஷன், கெமிக்கல் கலந்த அழகு சாதனங்கள் என எல்லாமே சேர்ந்து முகத்தில் சுருக்கங்கள் கருவளையம் என எல்லா பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல சருமம் பாதித்த பிறகுதான் நமக்கு தெரிகிறது.அதற்காக மேலும் விளம்பரங்களைப் பார்த்து, கண்ட கண்ட அழகு சாதனங்களை போடாமல், இயற்கை வழியிலேயே நம் சருமத்தை ரிப்பேர் செய்யலாம் வாருங்கள்.
வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஐந்தே நிமிடங்களில் தயார் செய்யலாம். இது பக்க விளைவினைத் தராது. சமையலறையில் இருக்கும் இந்த பொருட்கள் சருமத்தின் சுருக்கத்தைப் போக்கி, போஷாக்கு அளித்து முகத்தை ஜொலிக்கச் செய்யும்.

தேவையானவை :

பால் பவுடர் 1 டீஸ்பூன்
தேன் -1 டீஸ்பூன்
பால் பவுடல் லேக்டிக் அமிலத்தை கொண்டுள்ளது. அது சரும துவாரத்தில் அடைத்திருக்கும் இறந்த செல்களை அகற்றி துவராங்களை திறக்கச் செய்கிறது. இதனால் சருமம் நன்றாக சுவாசிக்க உதவுகிறது.ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுருக்கங்கள் விலகும். முகத்தசைகள் இறுக்கமாகும்.
தேன் சிறந்த ஆன்டிஆக்ஸிடென்ட்.முகத்தில் ஏற்படும் தொற்றுக்களையும் அழுக்குகளையும் அகற்றும் . முகத்தை தொய்வடையாமல் இறுகச் செய்யும்.முகத்திற்கு பளபளப்பைத் தரும்.
இந்த இரு பொருட்களையும் சம அளவு எடுத்து, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

பாலாடை : வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையுடன் தேன் தேர்த்து முகத்தில் போட்டு காய வைக்கலாம். பின் கழுவிவிட வேண்டும்.இவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, சருமம் மிக அழகாய் மாறிவிடும்.

எண்ணெய் சருமமா?
எண்ணெய் சருமத்திற்கு வெள்ளரிக்காய் சிறந்த பலனகளைத் தருமம். சருமத்திற்கு தேவையான எண்ணெயை தக்க வைத்து அதிகப்படியான எண்ணெயை அகற்றிவிடும். அதேபோல் எலுமிச்சை சாறு இறந்த செல்களை அகற்றி முகப்பருக்களை மறையச் செய்யும்.

தேவையானவை :

வெள்ளரிக்காய் -2 துண்டுகள்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சில சொட்டுக்கள்.
வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் பால் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து முகத்தில் தடவுங்கள் . காய்ந்ததும் கழுவி விடலாம். பிறகு வித்யாசத்தை நீங்கள் காண்பீர்கள்.
மேற்கூறிய இரு பேக்குகளும் பாலினால் செய்யக்கூடியவை. வாரம் இரு முறை செய்யலாம். பின் உங்கள் முகம் பொலிவு பெறுவதை உங்கள் தோழிகளே சொல்வார்கள்.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

Benefits of Ginger Juice(இஞ்சி ஜூஸ்)

இஞ்சியின் மருத்துவ குணங்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அழகிலிருந்து ஆரோக்கியம் வரைக்கும் இஞ்சி அற்புத பல்களைத் தரும். இஞ்சி ஜூஸுடன் உங்கள் காலை நேரத்தை தொடங்கியிருக்கிறீர்களா? இல்லையென்றால் இதை படித்துப்பாருங்கள்.

இந்த இஞ்சி ஜூஸ் உங்கள் வயிற்றிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவைக்கும்.

இஞ்சி ஜூஸ் செய்யும் முறை :

இஞ்சியின் தோலை உரித்துவிட்டு , துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒன்றரைக் கப் அளவுள்ள நீரை கொதிக்க வையுங்கள்.
நீர் கொதித்ததும் இஞ்சித் துண்டுகளை அதில் போட்டு மேலும் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.பின் ஆற வைத்து வடிகட்டி அதனுடன் சிறிது தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

இந்த இஞ்சி ஜூஸின் மகத்துவத்தை பார்க்கலாம்.

உங்களுக்கு உடல் நிலை சரியில்லாம இருந்தால், சோர்வாக இருப்பீர்கள். அந்த சமயங்களில் இது மிகவும் நல்லது.
உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும். மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
தொற்று நோய்கள் கிட்ட நெருங்காது.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். குளிர் ஜுரம் அல்லது குளிரானால் நடுங்கும்போது இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு தேவையான சூட்டை அளித்து நடுக்கத்தை கட்டுபடுத்தும்.
மன அழுத்தம், நடுக்கம்,நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளுக்கு இந்த இஞ்சி ஜூஸ் நல்ல தீர்வை அளிக்கிறது. நரம்பு மண்டலத்தை நலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஜீரண மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்கிறது. வயிற்றில் தங்கும் நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும். வாய்வு, அஜீரணம் மற்றும் அசிடிட்டியாகியவைகளை குணப்படுத்தும்.
இது வயிற்றில் உருவாகும் அமிலத்தை சமன் செய்து, வயிற்றை கூலாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து, புற்று நோய் வராமல் காக்கும்.
உடலில் இருக்கும் அன்றாட கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும் இந்த அற்புத ஜூஸ். 
நோயற்ற வாழ்வே மிக முக்கியமான செல்வம். உடலுக்கு எந்த உணவு நன்மை தருகிறதோ அவற்றை உண்டு, ஆரோகியமாய் வாழலாம்.

இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?



நகரங்களில் இருக்கும் ட்ராஃபிக் அசாதரணமானது. பஸ்ஸிலோ , காரிலோ போவதை விட பைக்கில் போவது மிகவும் வசதி. சிக்னலில் நிற்கும் வண்டிகளின் சந்து பொந்துகளில் கூட போய் விடலாம். நேரம் மிச்சமாகும். இரு சக்கரங்களில் ஹெல்மட் அணியாமல் போக முடியாது . ஆனால் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும் என்பது தெரியுமா?

தொடர்ந்து உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம் . மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும்.அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள் . அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ்.

ஹெல்மெட் அணிவதனால் எப்படி முடி உதிர்கிறது?

தலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது , சூடும் ,வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு,அரிப்பு , ஏற்பட்டு முடி பலமிழந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.

எப்படி முடி உதிர்வதை தடுக்கலாம்?

ஹெல்மெட் அணியும் முன் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக் கொள்ளுங்கள். இறுக்கமாக கட்டக் கூடாது. இது ரத்த ஓட்டத்தை பாதிக்கும். ஸ்கார்ஃப் காட்டனாக இருக்க வேண்டும். இதனால் ஹெல்மெட்டினால் வரும் வெப்பம் தலையினைப் பாதிக்காது. தலையில் ஏற்படும் வெப்பததை காட்டன் ஸ்கார்ஃப் உறிஞ்சுக் கொள்ளும்.
ஸ்கார்ஃபை வாரம் இரு முறை துவைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால் அதில் அழுக்கு சேர்ந்து அதுவும் தலைமுடி உதிரக் காரணமாகிவிடும்.
அவ்வப்போது சிக்னலில் ஹெல்மெட் கழட்டி தலையில் காற்று படும்படி விடுங்கள்.இது வியர்வை ஏற்படாமல் தடுக்கும்.
உங்களுக்கு முன்னதாகவே ஸ்கால்ப்பில் பிரச்சனை இருந்தால் அவற்றிற்கு வைத்தியம் செய்த பின் ஹெல்மெட் அணியுங்கள். இல்லையென்றால் வெகு சீக்கிரம் முடியை இழக்க நேரிடும் .
உங்கள் ஹெல்மெட்டினை வேறொருவருக்கு தராதீர்கள் அல்லது வேறொருவரின் ஹெல்மெட்டினை நீங்கள் போடாதீர்கள். இதனால் மற்றவரிடமிருந்து வரும் பொடுகு அல்லது ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
இது தவிர்த்து நீங்கள் வீட்டில் பண்ண வேண்டியது உங்கள் முடியையும் ஸ்கால்ப்பையும் பராமரிப்பதே. அதற்கான வழிகளை கீழே காணுங்கள்
சோற்றுக் கற்றாழை :
இரு ஸ்பூன் சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை 1 ஸ்பூன் புளிப்பான தயிரில் கலந்து தலையின் வேர்க்கால் மற்றும் முடி நுனி வரை தடவ வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்வதால் தொற்றுக்களிலிருந்து உங்கள் முடியை மீளச் செய்யும். வேர்க்கால்கள் பலப்படும்.

இஞ்சிச் சாறு:
இஞ்சியை துருவி அதிலிருந்து சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். போதிய அளவு இஞ்சிச் சாற்றினை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தலையில் ஸ்கால்ப்பில் படும்படி செய்ய வேண்டும்.காய்ந்த பின்ழுவங்கள். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு, அரிப்பு பிரச்சனைகள் குறைந்த பின் வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.
வாரம் மூன்று முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும் . அதில் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள். போதிய அளவு நீர் குடியுங்கள். அதோடு மேற்கூறியவைகளை பின்பற்றுங்கள். அதன் பின் உங்கள் தலைமுடி மிக பத்திரமாக இருக்கும்.
Vitamin E is good for the hair too

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்!!!

முடியை அலச வேண்டும் 

எப்போதுமே தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். மேலும் தலை முடியின் வகையை பொறுத்து, அதற்கு தகுந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.


கடுகு எண்ணெய் 


ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்


வெந்தயம் 


சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.


மசாஜ் 


முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டுவதை தடுக்கும்.


வெங்காயம்


தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து, பின்னர் அங்கே தேனை தடவினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.

முட்டை 


முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் முடி கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை, சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.


இயற்கை ஷாம்பு 


5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று, நன்கு ஆரோக்கியமாக வளரும்.


தேங்காய் எண்ணெய் 


ஒரு கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, காய வைத்த நெல்லிக்கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி, அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால், முடி கொட்டுதலின் அளவு கண்டிப்பாக குறையும்.


நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு


நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.

பசலைக்கீரை சாறு


தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்.

கொத்தமல்லி 


பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள். அதுவும் ஒரு தீர்வே.


தேங்காய் பால் 


தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.



இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்




Special drink for summer(பானகம்)

வெயிலுக்கு ஏற்ற பானகம்



தேவையானவை: 

  • வெல்லம் - 200 கிராம்
  • புளி - 50 கிராம்
  • பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் - 2
  • புதினா இலைகள் - 5
  • எலுமிச்சைப்பழம் - 1

செய்முறை:

வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். 
புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். 
வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். 
பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: 

உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். 
தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். 

இ‌ந்த பானக‌ம் கோடை‌யி‌ல் உட‌ல் கு‌ளி‌ர்‌ச்‌சி அடைய வே‌ண்டுமானா‌ல் குடி‌க்க‌ உக‌ந்தது ஆகு‌ம்.

இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

Benefits of Cauliflower(காலிஃபிளவர்)

காலிஃபிளவர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?


  • செரிமானப்பாதையைச் சீர்செய்யும் காலிஃபிளவர் !!
  • கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும்.
  • ஒரு நாளுக்குத் தேவையான அளவு வைட்டமின் சி நிறைவாக உள்ளது.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
  • செரிமானப்பாதையைச் சீர்செய்யும்.
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
  • வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
  • தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
  • எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்துகிறது.
  • சல்ஃபோராபேன் (Sulforaphane) சத்து இருப்பதால், புற்றுநோய் செல்களை அழிக்கும்.
  • மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கும்.
  • பைடோநியூட்ரியன்ட்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், நாள்பட்ட நோய்களின் தீவிரம் குறையும்.
இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்

Benefits of Pumpkin(பரங்கிக்காய்)

பரங்கிக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?


  • உடல் எடை அதிகரிக்க பரங்கிக்காய் !
  • கிட்டப்பார்வை, தூரப்பார்வையைச் சரிசெய்யும்.
  • புற்றுநோய் வரும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
  • உடல் எடை அதிகரிக்க உதவும்.
  • தசைகள் வலுவாகும்.
  • நல்ல உணர்வுகளை உண்டாக்கும்.
  • பெப்டிக் அல்சரை சரிசெய்யும். ப்ராஸ்டேட் வீக்கத்தைச் சரிசெய்யும்.
  • உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
  • பொலிவான சருமம் கிடைக்கும்.
  • இதய நோய்களைத் தடுக்கும்.
  • நல்ல உறக்கத்தைத் தரும்.
  • கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
  • வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன.
  • உடல் எடை அதிகரிக்க, இதைச் சாப்பிடலாம்.
  • இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்