முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்களை வலிமைப்படுத்த இத ஒரு டம்ளர் குடிங்க...


உடலில் முழங்கால் மூட்டுகள் தான் மிகவும் முக்கியமானது. முழங்கால் மூட்டுகள் தான் உடலுக்கு சரியான நிலையை வழங்கி, நடக்கவும், குதிக்கவும், நிற்கவும் உதவுகிறது. நாட்கள் செல்ல செல்ல முழங்கால் மூட்டுகளில் உள்ள தசைநாண்கள் பாதிக்கப்படும்.

தசைநாண்கள் என்பது தசைகளையும் எலும்புகளையும் இணைக்கும் ஓர் கடினமான நார் பட்டையாகும். இது பாதிக்கப்பட்டால் தான், கடுமையான மூட்டு வலிகளை சந்திக்கக்கூடும். தசைநாண்கள் வலிமையுடன் இல்லாவிட்டால், அதனால் ஒருவர் எந்த ஒரு செயலையும் வேகமாக செய்ய முடியாது.

சில நிமிடங்களில் மூட்டு வலியை மாயமாய் மறையச் செய்யும் அற்புத எண்ணெய்!

ஆனால் இந்த தசைநாண்கள் ஓர் அற்புதமான ஸ்மூத்தியின் மூலம் வலிமையாக்க முடியும். இங்கு அந்த ஸ்மூத்தி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சத்துக்கள் 
இந்த ஸ்மூத்தியில் மக்னீசியம், புரோமிலைன், சிலிகான் மற்றும் வைட்டமின் சி போன்ற நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் உள்ளது. இதனால் முழங்காலில் உள்ள வலி குறைந்து, தசைநாண்களுக்கு மட்டுமின்றி உடலுக்கும் நல்ல வலிமையையும், ஆற்றலையும் வழங்கும்.


ஸ்மூத்தியின் நன்மை 
இந்த ஸ்மூத்தி தசைநாண்களில் இயற்கையான உயவுப்பொருளை வழங்கி, தசைநாண்கள் அதிகம் உராய்ந்து கிழிவது தடுக்கப்பட்டு, முழங்காலில் உள்ள தசைநார்களை வலிமைப்படுத்தும்.


தேவையான பொருட்கள்: 
அன்னாசித் துண்டுகள் - 2 கப் 
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப் 
ஓட்ஸ் பவுடர் - 1 கப் 
தண்ணீர் - 250 மிலி 
தேன் - 40 கிராம் 
பட்டை - 7 கிராம் 
பாதாம் - 40 கிராம்

செய்முறை: 
* முதலில் ஓட்ஸை வேக வைத்துக் கொள்ள வேண்டும். 
* பின் அன்னாசியை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். 
* பின்பு மிக்ஸியில் ஆரஞ்சு ஜூஸ், தேன், பாதாம், பட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
* அடுத்து அதில் வேக வைத்த ஓட்ஸ் மற்றும் அன்னாசிப் பழச்சாற்றினை ஊற்றி மீண்டும் நன்கு அரைத்து, ஐஸ் கட்டிகளைச் சேர்த்து பரிமாற வேண்டும்.


எடுக்கும் முறை 
இந்த ஸ்மூத்தியை மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், மூட்டு பிரச்சனைகள் நீங்குவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

குறிப்பு 
மூட்டு பிரச்சனைகளுக்கு ஏற்கனவே மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவர்கள், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த பானத்தைப் பருகக் கூடாது.


இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்
 

கற்றாழை ஜூஸில் பூண்டு சாறு கலந்து குடிப்பதால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?


இன்றைய மோசமான உணவுப் பழக்கத்தால், உடலில் நச்சுக்களின் தேக்கம் அதிகரித்து, அதன் காரணமாக பல்வேறு நோய்கள் வேகமாக உடலைத் தாக்குகின்றன. உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கவும் பல இயற்கை பானங்கள் உள்ளன.
அதில் ஒன்று தான் கற்றாழை ஜூஸில் பூண்டு சாற்றினை சேர்த்து குடிப்பது. இங்கு அந்த கற்றாழை பூண்டு ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், அதைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: 
கற்றாழை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை: 
மிக்ஸியில் கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி ஒருமுறை அடித்தால், ஜூஸ் ரெடி! 


இந்த ஜூஸை வாரத்திற்கு 5 நாட்கள் பருகி வர உடலைத் தாக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.


கொலஸ்ட்ரால் குறையும்
(CHOLESTEROL)

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைந்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சைனஸ் பிரச்சனை சரியாகும்
(SINUS)
கற்றாழை பூண்டு ஜூஸ் குடித்தால், நாசி துவாரங்களில் உள்ள நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறையும். இதனால் சைனஸ் பிரச்சனைகள் குணமாகும்.
உடல் எடை குறையும்(WEIGHT LESS)
இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவும்.

புற்றுநோய்(CANCER)
கற்றாழை பூண்டு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் வளமாக உள்ளது. இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும்.
காய்ச்சல் குணமாகும்(FEVER)
இந்த பானம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த்தொற்றுகளை அழித்து, உடலைப் பாதுகாக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்(BP)
இந்த ஆரோக்கிய பானம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது. இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மூளை ஆரோக்கியம்
கற்றாழை பூண்டு ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மூளை செல்களை வலிமைப்படுத்தி, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.





இதை அனைவருக்கும் பகிரவும்
இவன் உங்கள் நண்பன்